feedback

சனி, 15 மே, 2010

பிரிவு

தூங்காத பொழுதுகளும்
தொலைந்து போன கனவுகளும்
உன் வருகைக்காய் மட்டுமே
காத்து கிடக்கும் ....

உன் வீட்டின் வழியே
கால்கள் கடந்து போகையில்
விரல்களின் ரகசிய வழியனுப்பதலுக்காய்
கண்கள் இரண்டும் தேடல் கொள்ளும்

அதைக்கண்டு வெட்கப்பட்ட
காய்க்காத உன் புன்னகை பூ
ஆலமரமாய் என்னுள் வளர எத்தனிக்கும்

எங்கேயோ எதேச்சையாய் நம்
சந்திப்பின் காலங்களில்
சலனத்தை காட்டாத உன் முகம்
பாதைகள் கடந்த பின்
தலை திருப்பி எனையே எதிர்பார்க்கும்

சில நேரம் ''''
எதையோ சொல்ல நினைக்க..
உதடு மறித்து , உளறி வைக்கும்

இடையினில் உன் புன்னகை
அன்றைய பொழுது சாயுமட்டும்
என்னை உயிரோடு வாழவைக்கும்

சிறிதுதூரம் நீ பயணப்பட்டு போகையில்
உன் பிரிவு தாளாமல் இதயமும்
உந்துனையாய் உன்னோடு வரும்
நீ எனக்காய் உன்னுடையதை
விட்டுச் செல்வாய் ...

உன் புன்னகையின் அர்த்தம்
எப்படி எனக்கு தெரியாதோ -அப்படியே
உன் இல்லாத காலங்களில்
உன் மௌனத்தின் அர்த்தங்களும்

உன்னால் விளைந்த காதலை
என்னால் எப்படி தாங்க முடிகிறதோ
அப்படியே உன் பிரிவும் ......
அன்புடன் நான் ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக