feedback

சனி, 15 மே, 2010

பிரிவு

தூங்காத பொழுதுகளும்
தொலைந்து போன கனவுகளும்
உன் வருகைக்காய் மட்டுமே
காத்து கிடக்கும் ....

உன் வீட்டின் வழியே
கால்கள் கடந்து போகையில்
விரல்களின் ரகசிய வழியனுப்பதலுக்காய்
கண்கள் இரண்டும் தேடல் கொள்ளும்

அதைக்கண்டு வெட்கப்பட்ட
காய்க்காத உன் புன்னகை பூ
ஆலமரமாய் என்னுள் வளர எத்தனிக்கும்

எங்கேயோ எதேச்சையாய் நம்
சந்திப்பின் காலங்களில்
சலனத்தை காட்டாத உன் முகம்
பாதைகள் கடந்த பின்
தலை திருப்பி எனையே எதிர்பார்க்கும்

சில நேரம் ''''
எதையோ சொல்ல நினைக்க..
உதடு மறித்து , உளறி வைக்கும்

இடையினில் உன் புன்னகை
அன்றைய பொழுது சாயுமட்டும்
என்னை உயிரோடு வாழவைக்கும்

சிறிதுதூரம் நீ பயணப்பட்டு போகையில்
உன் பிரிவு தாளாமல் இதயமும்
உந்துனையாய் உன்னோடு வரும்
நீ எனக்காய் உன்னுடையதை
விட்டுச் செல்வாய் ...

உன் புன்னகையின் அர்த்தம்
எப்படி எனக்கு தெரியாதோ -அப்படியே
உன் இல்லாத காலங்களில்
உன் மௌனத்தின் அர்த்தங்களும்

உன்னால் விளைந்த காதலை
என்னால் எப்படி தாங்க முடிகிறதோ
அப்படியே உன் பிரிவும் ......
அன்புடன் நான் ........

புதன், 5 மே, 2010

கூடல்

நிலவொளியில் மட்டும் காய்கிறது
நம் செய்த பாவ கரைகளின்
துவையாத உள்ளாடைகள்

நிலவு

நம்மை பார்த்து சிரிக்கும்
நிலவுக்கு தெரியும்
ஏதோ ஓரிடத்தில்
யாரோ கலங்கடிக்கிறார்கள்
நிலவின் பிம்பத்தை
தண்ணீரில் கல்லெறிந்து

அறிவிப்பு

வானொலி அறிவிப்பு
இன்னும் இருபத்திநான்கு
மணி நேரத்தில்
புயல் தாக்க கூடும்
எச்சரிக்கை தேவை
அலச்சியம் செய்தேன்
எதிரே நீ வந்தாய் -ஒரு நிமிடம்
சிதைந்து விட்டது என் வாழ்க்கை

கோழை

பெண் எதிரே காதலை சொல்பவன்
வீரன் என்கிறாய்
நான் உன்னிடம் சொன்னபோது
கோழை ஆகிறேன்

பொய்

எனைக் கண்ட யாரிடமும்
தெரிந்தே பொய் கூறுகிறேன்
இதுவரை காதல் இல்லை என்று
நடந்தேறிய உன் திருமணத்துக்குப்பின் ..

எதிர்காலம்

உயர் பதவி உத்தியோகம்
உல்லாச சிற்றுந்து
குளிர்சாதன குடிலுடன்
கும்மாள நீச்சல்குளம்
தன்கீழ் பலபேர்
தலைதாழ்த்தி வேலை பார்க்க
கனா கண்டேன் நான்
வகுப்பறை தூக்கத்திலே ...

எதிர்பார்ப்பு

எதிபார்ப்புடன் கண்ணில் பட்டது
குப்பை தொட்டியில் குழந்தை
-என்னுடையதோ

அவள்

அழகிய வேலைப்பாடுடன்
அட்சய பாத்திரம்-ஓஹ் அவள்

வறுமை

கிடைக்கவில்லை எனக்கு
வயிற்றெரிச்சலில் நான்
-குப்பைதொட்டியில் நாய்

திங்கள், 3 மே, 2010

கரைகளின் ஈரம்

ஓல குடிசை ஓரத்துல
சூரியன் தொலஞ்ச நேரத்துல
கட்டி வச்ச கோட்ட ஒண்ணு
கரையாம பாத்துகிட்டேன் .

ஓடி வந்த அலையால
ஒருபட்டு நனையலன்னு
ராத்திரி கேட்ட மகன்கிட்ட
பொய்யைத்தான் சொல்லிவச்சேன் ...

கடலுக்கு போன மச்சான் இன்னும்
கரை வந்து சேரலியே
கவலையெல்லாம் கூட்டிகிட்டு
கண்விழிச்சு காத்திருந்தேன்
மாமன் இன்னும் வரலியே ...
கண்மூடி தூங்கிபுட்டேன் காலையில .

என் புருஷன் அடிச்சானோ என்னவோ
வேகமா எந்திரிச்சேன் வலியோட
ஐயோ ...
ஒத்த புள்ளைய காணலியே நான்
பெத்த புள்ளைய காணலியே
ஒன்டிருந்த வீட்டையும் காணலியே
ஓடுகாலி கடலால..

எங்கேயும் காணலியே
என்ன பெத்த ராசாவே ..
முத்தெடுக்க போன மச்சான்
திரும்பி வந்தா என்ன சொல்ல

தெருவெல்லாம் தேடிப்பார்த்தேன்
பொணம்கூட கெடைக்கலியே ...
கரையெல்லாம் தேடி பார்த்தேன்
கண்ணே உன்ன பார்க்கலியே ..

கண்னீர நான் கொட்ட மாட்டேன்
அது கடலுக்குள்ள சேர்ந்திடுமே
பாவ மகன் குடிக்கத்தான்
பாலு மட்டும் கேப்பானே
கொட்டிவச்சேன் பாலத்தான்
கொடம்கொடாம கடலுக்குள்ள ...

பொங்கலுக்கு கேட்டேன்னு
புது துணி வாங்கி வச்சேன்
நான் பெத்த ராசாவே சீக்கிரமா வந்திடையா...
போட்ட சட்ட அழுக்கானா யாரு
உனக்கு புதுசு தருவா
அழுக்கானா அம்மா அடிப்பாளேன்னு
வீட்டுக்கு வராம இருந்திடாதய்யா ..

ஒத்த உசிர புடிச்சு கிட்டு
உனக்காக நான் காத்திருக்கேன்
சீக்கிரமா வந்திடையா ...

சனி, 1 மே, 2010

வரலாறு....

பழஞ் சோறு தின்று
பழங்கதைகள் பேசி
பழகிப்போன மனிதர்களிடம்
எப்படிச்சொல்வது அவர்களது வரலாற்றை..

யாரிடம் சொல்வது இதை ...
முச்சந்தியில் அடித்துக்கொள்ளும் சகோதரதினடத்தில்
இருக்கும் ஆயுதம் யாருடையது என்பதை ...

பதிவுகள் இல்லாத அவர்களின்
வாழ்கை என்னவோ இதுதான் ......
அவர்களிடம் சொல்லி வந்த
பாதையும் இதுதான் ....

எப்படிச் சண்டை இடுவார்கள்.....
அவர்களின் பாட்டனும் பூட்டனும்
சண்டையிட்ட கதையை சொல்
அவன் அப்பன் ஆத்தா அடிச்சிகிட்ட
கதையும் கூட சொல்

நாங்கள் உங்கள் பாதுகாவலர்கள்
எங்கள் துப்பாக்கி முனைகள்
உங்களை பார்த்துக்கொண்டே தான் இருக்கும்

உங்கள் எதிரியின் பீரங்கிகளின்
முனைகளை விட சிறிய முனைதான் அது
நாங்கள் உங்களை விட்டு விலகுவதும் இல்லை
உங்களை கைவிடுவதும் இல்லை ...
நாங்கள் உங்கள் பாதுகாவலர்கள்
என்றிருக்கவேண்டும் அரண் ...

கம் யுனிசத்தின் வர்ணம் அங்கே
உள்ளிருந்து வெளியே கொட்டப்படும்

தலைவன் இருக்கிறன் ..
கவலை கொள்ளாமல்
அவர்களின் சுதந்திரத்தை
அவனிடம் பத்திரமாக
கொடுத்து வைக்கச் சொல் ..
சண்டைகள் முடிந்த பின்
அவர்களின் ஆன்மாவிடமாவது
திருப்பி தரப்படும் என்று சொல்..


சில நேரம் சிவப்பு ரத்தங்களில்
தட்டுகள் தறிக்கெட்டு ஓடும்..
உடல் சூடாகும்..
மூளை வேலை செய்யும்...
சிந்தித்து மட்டும் விட்டால்.. கூடாது

துப்பாக்கியை கையில் கொடு
தூங்காமல் விழிக்க கற்றுக்கொடு
பழைமை பேசு ...
பகை வளர் ...-இறுதியில்
துப்பாகிகள் மட்டும் பேசிக்கொள்ளும்
அவர்கள் பேசாமல் சாவார்கள்..

பழஞ் சோறு தின்று
பழங்கதைகள் பேசி
பழகிப்போன மனிதர்களிடம்
எப்படிச்சொல்வது அவர்களின் இந்த வரலாற்றை..

தேசம்

இன்னும் தொலைவு ஆயினும்
நான் செல்ல வேண்டும்
எனக்கான வேலை அங்கே
கொஞ்சம் இருக்கிறது...
இதோ இன்னும்
விடியல் இருப்பினும்
கனவுகள் என்னை எழுப்புகின்றன...

என் வானமே ..
நீ அருகில் வராதே
என் பூமியே ..
நீ தொலைந்து போகாதே
நான் நாடு கடத்தப்பட்டுருக்கிறேன்
என் தேசத்திலிருந்து..

அந்த இடத்தில் என்ன இருக்கிறது
என் விதிகளை மீறிச் செல்கிறேன்
பாதைகள் வேகமெடுக்கின்றன ...

வறண்ட பாலைவனத்தின்
மனிதனைப் போல நான் தாகமெடுத்திருக்கிறேன்

தூக்கு மேடையின் கைதியை போல் -இங்கே
நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன்
பஞ்சத்தை
கூவி விற்கும் முதலாளிகள் இங்கே
அமைதி இல்லாமல் உறங்குகிறார்கள்

பச்சை புல்வெளிகளிருந்தும்
பாதிதூரம் கடந்து வந்து
திரும்பி பார்க்கும்
குளத்தின் கரையினிருந்தும்
தேவைகளுக்காய் மட்டுமில்லாது
என் சமூகத்திற்காகவும் தூக்கிய சென்கொடியிலிருந்தும்
நான் தனிமை பட்டிருக்கிறேன்

'காதலின் துயரம் ' என்னை துரத்தட்டும்
'செம்மணி வளையல்கள் ' என்னை நெருக்கட்டும் ...
நான் விரைந்து செல்ல வேண்டும்

வழிநெடுக வீசும் சிவந்த பூக்களின் நிறம்
புரட்சியின் நாட்களை நினைவு படுத்தும்
நான் சந்தோசமாய் ராகங்கள் பாடுவேன்....

ஏய் காவலனே..
நான் ஊர்செல்லும் மட்டும்
உயிர் வாழ
கொஞ்சம் ரொட்டி கொடு

அதோ அங்கே ஓரிடத்தில்
அது சிறைபட்டு இருக்கிறது
பணத்தின் முதலாளிகளாய் ..
பாடுபடாதவனின் கட்சிகளாய்
பூஷ்வாவின் கையில் அது சிறைபட்டிருக்கிறது.

விடுதலையின் அர்த்தம் அதற்க்கு
இன்னும் வழங்கப்படாமலே இருக்கிறது
வேதனையின் புலம்பல்கள் மட்டும்
அங்கே தினந்தோறும் கேட்டுக்கொண்டே இருக்கிறது...

ஆண்டுகள் பல கடந்தாலும்
அடிமைச் சமூகம் அங்கேதான்
இன்னும் ஒருமித்து கிடக்கிறது
பழங்கதைகள் பேசிபேசி
புலாங்கிதுப்போன தலைவர்கள்
இன்னும் கொலைசெய்கிறார்கள்
என் சமூகத்தையும் ...
என் நாட்டையும்...

அந்த இடத்தில் என்ன இருக்கிறது
என் விதிகளை மீறிச் செல்கிறேன் ...
என் தேசமே உன் நினைவுகள் சுமந்தபடி .........

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

மே தினம்

பச்சையாய் விரிந்து கிடக்கும்
தேயிலை தோட்டத்திலும்
சிவப்பு பழங்களை தாங்கிய
காப்பி செடிகளிலும்
வியர்வை கலந்த
மழை நீரின் வெள்ளத்திலும்
இழந்த துக்கதிற்காய்
உறங்கிப்போன உடல்களிலும்
உடலோடு ஒட்டிப்போய்
உப்பை மட்டும் மிச்சம் வைத்த
காக்கி சட்டைகளிலும்
வண்ண வண்ண நிறங்களில் பூத்திருக்கும்
குரோட்டன் செடிகளிலும்

நெருங்கி நிற்கும்
முல்செடியின் ஊடையும்
தெளிவாய் வெட்ட பட்ட
பாதைகளின் அமைப்புகளிலும்
ஒரு நேர சோற்றுக்காய்
காத்து கிடக்கும்
நடைபாதை தள்ளு வண்டியின்
தட்டுச் சோற்றுக்குள்ளும்
மாதம் முதல் தொடங்கி
முடியும் வர உழைத்துவிட்டு
சம்பளதிற்காய் காத்து நிற்கும்
தொழிலாளியின் கால்களிடத்தும்
கலந்தே கிடக்கிறது உழைப்பு

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

உன் வருகை

என் வாசல் உன் வரவிற்காய்
காத்து கிடக்கும்

உன் பாதம் கடந்த பாதை எல்லாம்
விழிகள் பார்த்து நிற்கும்

நீ போகும் பொது விட்டு சென்ற
சின்னஞ்சிறு ஒரு முத்தம்
அதுவரை எனை உயிரோடு
வாழ வைத்திருக்கும்


உன்னோடு உறங்க செல்வதற்கு
நான் மலர்ப்படுக்கையை
ஆயத்த படுத்தி வைப்பேன் -அதில்
கனவுளும் தூங்கட்டுமென்று சிறிதாய்
இடமொன்று ஒதுக்கி வைப்பேன்

நீ கொண்டுவரும் மல்லிகையின் வாசத்திற்காய்
என் கூந்தலை கொஞ்சம் அலசி வைப்பேன்

வீட்டினுள் வந்ததுமாய் நீ
தேடும் என் மடியின் ஓரத்தை
சற்று தளர்த்தி வைப்பேன்

வழக்கம் போல நீயும் வருவாய்
எனைக் காணததுபோல்
உள்ளே செல்வாய்
விக்கித்து நின்ற
என் பின்னல் வந்து தளுவிக்கொள்வாய்
நீ இல்லாத காலங்களின்
துயரங்கள் தொலைந்து போகும்
நான் உன்னுடன் மகிழ்வுடன் களிகூருவேன் .....

திங்கள், 19 ஏப்ரல், 2010

என் காதலே...

ஓஹ் என் இனிய பாடலே ...
என் ராகங்கள் கேள்
இனிய கானங்கள் நம்
காதலை வேன்றுவிடட்டும்

ஓஹ் என் இனிய ராகமே...
பெருத்த காற்றின் சத்தத்திலே
குரல் எழுப்பும் குயிலாய்
நம் வாழ்வின் வசந்தகாலங்களை
நீ எப்படி இவளவு அழகாய் பாடுகிறாய்

ஓஹ் என் இனிய நிலவே...
இந்த இந்த இரவு காலத்தில்
எங்கிருந்தோ அழைப்புக்குரல் கேட்கிறது
அது ராகதேவதையின் விருப்பமாகவும் இருக்கலாம்
என் கால்கள் விரைவாய் எழுகின்றன

ஓஹ் என் இனிய காதலே...
உன் நினைவுகள் பீதோவன் இசைக்குறிப்புகள் போல்
எக்காலமும் இன்பமான இசைசையே தருகிறது

ஓஹ் என் இனிய காதலே...
அந்த தொடர்வண்டியின் சதம்
ஓர் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில்
நீ என்னுடன் பயணிப்பதை
மிகவும் ஆரவாரமாய் சொல்லிச் செல்கிறது

ஓஹ் என் இனிய காதலே...
நெடும் மலைத்தொடர்களாய்
வற்றிப்போன பாலைவனத்தின் சிறு நிழலாய்
தாகம் தீர்க்காத பெரும் கடலின் முத்தாய்
உன் இனிய பாடல்
விரிந்தே கிடக்கிறது
என்னுள் பூரணமாய்

ஓஹ் என் இனிய காதலே...
உனக்காய் வரையும்
எல்லா கடிதங்களிலும்
உன் மீது உண்டான காதலே பாடல்களாய் நிரம்பி வழிகிறது

ஓஹ் என் காதலே...
இந்த மாலை பொழுதுகள்
உறங்க செல்லும் மட்டும்
நன் உன்னை பற்றி பாடிக்கொண்டு தன இருப்பேன்
இந்த இரவுகள் உன் பாடலோடு என்னுள் கலந்து விடட்டும்

ஓஹ என் காதலே...
என் ராகங்கள் கேள்
நம் காதல் வாழட்டும் .

அன்புடன் நான் ....

உன்னை பற்றி ஒரு பாடல்

கவிதைகள் பாடச்சொன்னால்
நான் உன்னை பற்றியே பாடுவேன்
காதலை பாடச்சொன்னாலும்
நான் உன்னை பற்றியே பாடுவேன்

துயரத்தின் கண்ணீர் துளிக்கும்
நான் உன்னை பற்றியே பாடுவேன்
பட்டாம் பூச்சியின் வண்ணங்களுக்கும்
நான் உன்னை பற்றியே பாடுவேன்

இந்த பிரபஞ்சம் முழுதும்
நீயே நிறைந்திருக்கிறாய்

காற்றின் வழியே சுற்றிதிரிகிறாய்
நதி அலைகளின் சப்தத்தில் தாளமிடுகிறாய்
நாணலின் மேனியிலே
ஆடவும் செய்கிறாய்

பயணங்களில் எல்லாம்
காலத்தை கடத்தி போகிறாய்
பருவங்களில் எல்லாம்
முகங்கள் காட்டுகிறாய்
திசைகள் தோறும் பயணபடுகிறாய்

பஞ்சமுக கடவுளாகவும்
பரதேசியின் பட்டினியாகவும் வாழ்கிறாய்

இசையின் சுரங்களில்
ஏழையும் பிறப்பிக்கிறாய்
இன்னும் எத்தனை எத்தனையோ
அவ்வளவும் உன் உருவாக

அன்புடன் நான் ...











திங்கள், 5 ஏப்ரல், 2010

வாழ்க பெண்ணே என்னசெய்கிறாய்,
நான் தொலை தூரத்தில் தான் இருக்கிறேன் உன் அருகாமையின் நினைவுகளோடு . இங்கே நீ இன்னும் சிரித்து பேசிக்கொண்டு இருக்கிறாய், உன் பார்வைகள் அவ்வப்போது என்னை பார்த்து கொண்டே இருக்கிறது. நன் திட்டும் பொது தேம்பி தேம்பி அழுது கொண்டும் இருக்கிறாய் . நன் நலமாகத்தான் இருக்கிறேன்.

நம் வசந்தகாலங்களில் கொஞ்சம் பயணித்து பார், நீயும் நானும் நிலவினி கல்லெறிந்து கொலை செய்தோம் குளத்திற்குள் . கடற்கரை மணலோடு புதைந்து கிடந்தோம் அலைகளின் தொடுதலுக்காக.
எப்படி இருக்கிறது நம் சந்தித்து கொள்ளும் உன் வீட்டு மொட்டை மாடி .உன் பக்கத்துக்கு பாட்டி நம் கதையும் யாருக்கேனும் சொல்லுகிறாள?.
நானும் நீயும் பயணித்த கலங்களின் அடையாளங்கள் இன்னும்
அளிக்கபடாமலா இருக்கிறது .

கடவுளினும்

கடவுள் பிறந்தான் பூமியிலே
காதல் கனவு கண்டு
கால் வரை தொட்டது காதல்
கண்டு களித்தான்
இடுப்பின் ஓரம் ஏறிக்கொண்டது
மகிழ்வு கொண்டான்
கழுத்தின் மேலும் கவ்விகொண்டது
கனவை மட்டும் மறக்கவில்லை
உச்சியும் தொட்டது காதல்
விஷம் கொண்டான்
போதையில் அவன் பிதற்றுகிறான்

கவிதைகள் பிறக்கிறது
காதல் பிறக்கவில்லை அவளிடம்
தாடி வளர்த்தான்
அவள் பிரிந்து போன பின்
உற்றதும் இழந்தான்
உடுத்திய ஆடை அவிழ்ந்தான்

கல்லறையில் மறித்து வீழ்ந்தான்
இதயத்தில் அவளின் நினைவாகவே
காதலுக்கு கடவுள் மட்டும்
தனிபிரவியா என்ன
கல்லறை வாசம் கண்ட அவனும்
கண்டிருப்பான் காதல் எது வென்பதை

சனி, 3 ஏப்ரல், 2010

நீ

என் தூரிகையின் தழுவல்களை
செதுக்கி வைத்திருக்கிறாய்
பேரழகாய்



என் பாடலின் வரிகளை
வெறும் வார்த்தைகளை போலவே
உதிர்த்துவிட்டு செல்கிறாய்

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

நீ நழுவவிட்ட ஆடையைவிட

உன் வெட்கத்தையே ரசிக்கிறேன்